Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருப்புப் பூஞ்சை நோய் மருந்து வரியில்லாமல் இறக்குமதி

Webdunia
வியாழன், 27 மே 2021 (13:35 IST)
கருப்புப் பூஞ்சை நோய் மருந்தை வரியில்லாமல் இறக்குமதி செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 
 
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் மறுபுறம் கரும்பூஞ்சை தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் கரும்பூஞ்சை தொற்று அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் மொத்த பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
 
கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சையில் பயன்படும் ஆம்போடெரிசின் பி என்ற மருந்தை இறக்குமதியாளர்கள் வரியில்லாமல் இறக்குமதி செய்துகொள்ள வாக்குறுதி அடிப்படையில் அனுமதி தந்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். அரசு வரிவிலக்கு அளிக்கும் வரை இந்த முறை தொடரும்.
 
உயிர்களைக் காக்க இந்த மருந்து அவசியம் என்று குறிப்பிட்ட உயர் நீதிமன்றம், இந்த மருந்து பற்றாக்குறையாக உள்ளவரை இந்த மருந்தின் இறக்குமதிக்கு சுங்க வரியில் இருந்து அரசு விலக்கு அளிக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழியக்கம் சார்பில் விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா!

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments