தமிழ்நாடு மட்டுமல்ல, கேரளாவில் கணக்கை தொடங்குகிறது பாஜக.. எத்தனை தொகுதிகளில் வெற்றி?

Mahendran
வியாழன், 4 ஏப்ரல் 2024 (15:18 IST)
தமிழ்நாட்டில் பாஜக நோட்டாவுக்கு போட்டி ஆகத்தான் உள்ளது என்றும் எந்த காலத்திலும் தமிழ்நாட்டில் ஒரு எம்பிஐ கூட பாஜக பெற முடியாது என்றும் திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கூறிவரும் நிலையில் தமிழ்நாட்டில் பாஜக மூன்று தொகுதிகளில் வெற்றி பெறும் என்று இந்தியா டிவி கருத்துக்கணிப்பு வெளியிட்டதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரளாவிலும் இதுவரை எம்பி தொகுதியை கைப்பற்றாமல் இருந்த பாஜக அங்கும் தனது கணக்கை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
கேரளாவை பொறுத்த வரை மொத்தம் 20 தொகுதிகள் இருக்கும் நிலையில் அதில் காங்கிரஸ் 7, சிபிஎம் 5, சிபிஐ 1, மற்ற இதர கட்சிகள் ஒவ்வொன்றாக வெற்றி பெறும் என்று கூறியுள்ள இந்தியா டிவி பாஜக 3 இடங்களை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது 
 
குறிப்பாக திருவனந்தபுரத்தில் ராஜீவ் சந்திரசேகர், பத்தனம்திட்டா தொகுதியில் அனில் ஆண்டனி மற்றும் அட்டிங்கல் என்ற தொகுதியில் முரளிதரன் ஆகிய மூவரும் ஜெயிப்பார்கள் என்று கூறியுள்ளது 
 
திருவனந்தபுரம் தொகுதியில் பலம் வாய்ந்த சசிதரூரை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று கருத்துக்கணிப்பில் கூறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கை: மத்திய அரசு பரிசீலனை

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு நடத்தியவர் எந்த நாட்டு தீவிரவாதி? FBI கண்டுபிடித்த உண்மை..!

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன்... அரசியல் பரபர...

இந்திய பங்குச்சந்தை இரண்டாவது நாளாக உயர்வு: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

தங்கம் விலையில் இன்று லேசான சரிவு.. ஆனாலும் ரூ.94000க்கும் மேல் ஒரு சவரன் விற்பனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments