Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் முதலில் திருமணம் செய்யட்டும்; ஓரின சேர்க்கைக்கு எதிரான சட்டம் அமலில் உள்ளது: பாஜக எம்பி சர்ச்சை!

Webdunia
வெள்ளி, 27 ஜூலை 2018 (19:01 IST)
சமீபத்தில் பாராளுமன்றத்தில் பாஜக அரசுக்கு, குறிப்பாக பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல் கூறிய குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், பேசி முடித்த பின் ராகுல் மோடியை கட்டிப்பிடித்ததும் சர்ச்சையை கிளப்பியது.
 
இதற்கு உபி முதல்வர் யோகி, பிரதமரை கட்டிப்பிடித்தது போல் ராகுல் காந்தி என்னை கட்டிப்பிடிப்பதற்கு முன்னர் 10 தடவை யோசிக்க வேண்டும் என்று கூறினார். 
 
ராகுலும் சமீபத்தில் இப்போதெல்லாம் என்னை பார்த்தாலே பாஜக எம்.பிக்கள் 2 அடி தள்ளி நிற்கிறார்கள். அவர்களை நான் கட்டிப்பிடித்து விடுவேன் என அவர்கள் பயப்படுகிறார்கள் என தெரிவித்தார்.
 
ஆனால் தற்போது ராகுல்காந்தி குறித்து பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது, ராகுல் காந்தி முதலில் திருமணம் செய்துக்கொண்டு பிறகு எங்களை கட்டிப்பிடிக்கலாம். ராகுல் காந்தியால் கட்டியணைக்கப்படும் தலைவர்களை அவரது மனைவிகள் விவாகரத்து செய்துவிடுவார்கள். ஓரின சேர்க்கைக்கு எதிரான 377 சட்டப்பிரிவு இன்னும் கைவிடப்படவில்லை என இவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments