சிவசேனா எம்.எல்.ஏ.வை துப்பாக்கியால் சுட்ட பா.ஜ.க.எம்.எல்.ஏ.. காவல் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran
சனி, 3 பிப்ரவரி 2024 (15:36 IST)
மும்பை காவல் நிலையத்தில் சிவசேனா எம்எல்ஏவை, பாஜக எம்எல்ஏ துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மும்பை அருகே உள்ள ஒரு காவல் நிலையத்தில் நிலப்பிரச்சினை தொடர்பாக சிவசேனா எம்எல்ஏ ராகுல் பட்டியல் மற்றும்  பாஜக எம்எல்ஏ கணேஷ் ஆகிய இருவருக்கும் இடையே பிரச்சனை வந்துள்ளது. 
 
போலீசார் இரு அணிகளிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருந்த நிலையில் திடீரென  கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் பாஜக எம்எல்ஏ தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சிவசேனா தலைவர் மீது சரமாரியாக சுட்டார். 
 
இதில் சிவசேனா எம்எல்ஏ மீது நான்கு தோட்டாக்கள் பாய்ந்துள்ளதாகவும் இதனை அடுத்து காவல்துறையினர் பாஜக எம்எல்ஏவிடம்  இருந்து துப்பாக்கியை பிடுங்கி அவரை கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
தற்போது சிவசேனா எம்.எல்.ஏ சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி நட்சத்திர ஹோட்டலில் 6 மாதங்கள் தங்கிய பெண் கைது.. பாகிஸ்தானில் இருந்து பெரிய தொகை வந்ததா?

திருமணமான தாய்மாமா மகளை உறவுக்கு அழைத்த இளைஞர்.. சம்மதிக்காததால் துப்பாக்கியால் சுட்டு கொலை..!

கோவாவில் 77 அடி உயர ராமரின் வெண்கல சிலை.. பிரதமர் மோடி திறக்கிறார்..!

செங்கோட்டையன் இணைவு!.. தவெகவுக்கு என்ன லாபம்?.. அதிமுகவுக்கு என்ன நஷ்டம்?...

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments