Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவசேனா எம்.எல்.ஏ.வை துப்பாக்கியால் சுட்ட பா.ஜ.க.எம்.எல்.ஏ.. காவல் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran
சனி, 3 பிப்ரவரி 2024 (15:36 IST)
மும்பை காவல் நிலையத்தில் சிவசேனா எம்எல்ஏவை, பாஜக எம்எல்ஏ துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மும்பை அருகே உள்ள ஒரு காவல் நிலையத்தில் நிலப்பிரச்சினை தொடர்பாக சிவசேனா எம்எல்ஏ ராகுல் பட்டியல் மற்றும்  பாஜக எம்எல்ஏ கணேஷ் ஆகிய இருவருக்கும் இடையே பிரச்சனை வந்துள்ளது. 
 
போலீசார் இரு அணிகளிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருந்த நிலையில் திடீரென  கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் பாஜக எம்எல்ஏ தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சிவசேனா தலைவர் மீது சரமாரியாக சுட்டார். 
 
இதில் சிவசேனா எம்எல்ஏ மீது நான்கு தோட்டாக்கள் பாய்ந்துள்ளதாகவும் இதனை அடுத்து காவல்துறையினர் பாஜக எம்எல்ஏவிடம்  இருந்து துப்பாக்கியை பிடுங்கி அவரை கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
தற்போது சிவசேனா எம்.எல்.ஏ சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments