Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக எம்.எல்.ஏவை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் யார்?

Webdunia
வெள்ளி, 22 மார்ச் 2019 (08:21 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் மர்ம நபர் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் பா.ஜனதா எம்.எல்.ஏ. யோகேஷ் வர்மா படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வரும் யோகேஷ் வர்மா  நேற்று தனது அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்து ஒரு மர்ம நபர் திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் எம்.எல்.ஏவை சுட்டு விட்டு தப்பி ஓடினார்.

இதனால் எம்.எல்.ஏ.வின் காலில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த நிலையில் அவர் அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது எம்.எல்.ஏவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள உபி மாநில போலீசார், எம்.எல்.ஏவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய மர்ம நபரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments