பாஜகவினரை கொலை செய்ய பினராயி விஜயன் நிதியுதி செய்கிறார். அமைச்சர் குற்றச்சாட்டு

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2017 (19:37 IST)
கேரளாவில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களை கொலை செய்ய பினராயி விஜயன் நிதியுதவி செய்கிறார் என்று பாஜக அமைச்சர் கிரண் ரிஜிஜூ குற்றம் சாட்டியுள்ளார்.


 

 
கேரளாவில் பாஜகவினர் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக ஜன் ரக்‌ஷா யாத்ரா நடத்தி வருகின்றனர். இதில் பங்கேற்ற மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கேரள முதல்வர் பிரணாயி விஜயன் மீது குற்றம்சாட்டினார்.
 
அவர் கூறியதாவது:-
 
கேரளாவில் ஆளும் இடதுசாரிகள் ஈடுபடும் வன்முறைகளை பொறுத்துக் கொள்ள முடியாது. சிபிஎம் கட்சி தேச விரோத சிந்தனைகளை வளர்த்தெடுக்கிறது. இந்நேரம் காங்கிரஸ் மத்தியில் இருந்தால் கேரளாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருக்கும்.
 
ஆனால் பாஜக இடதுசாரிகளுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடுகிறது. பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் தொண்டா்களை கொலை செய்ய மாநில அரசு நிதியுதவி செய்கிறது என குற்றம் சாட்டினார். 
 
மேலும் இந்த ஜன் ரக்‌ஷா யாத்ரா வரும் 17ஆம் தேதி முடிவடைகிறது. அதில் பல பாஜக மூத்த தலைவர்கள் கலந்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

பிரதமர் மோடி பொதுக்கூட்ட இடத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி.. ஆந்திராவில் சோகம்..!

4 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, ரூ.1 கோடிக்கும் மேல் ரொக்கம்.. ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் சோதனை.!

திமுக-வின் ஃபெயிலியர் ஆட்சிக்கு முடிவுரை.. தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி: ஈபிஎஸ்

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சதுரகிரி மலை ஏறுவதற்கு தடை.. பக்தர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments