ராமர் எங்களை ஆசீர்வதிப்பார்! – நீதிமன்ற தீர்ப்பால் பாஜகவினர் மகிழ்ச்சி!

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (17:56 IST)
28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் பாஜக பிரமகர்கள் மகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

1992ம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் மீதான வழக்கில் சம்பந்தப்பட்ட அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேருக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சிபிஐ நீதிமன்றம் பாபர் மசூதி மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்கள், சாட்சிகள் இல்லை என்றும், மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்தவே அத்வானி, மனோகர் ஜோஷி ஆகியோர் முயன்றார்கள் என்றும் கூறியுள்ள நீதிமன்றம் சம்பந்தப்பட்ட 32 பேரையும் வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டது.

நீண்ட ஆண்டுகள் நடைபெற்ற வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது குறித்து அத்வானி “ராமஜென்ம பூமி மூலமான என் சொந்த நம்பிக்கையும், கட்சியினரின் நம்பிக்கையையும் இந்த தீர்ப்பு நிரூபித்துள்ளது. ராமர் எங்களை ஆசீர்வாதமாக வைத்திருப்பார்” என கூறியுள்ளார்.

இந்த தீர்ப்பு குறித்து கூறியுள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் “நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. நீண்ட ஆண்டுகள் கழித்து நீதி வென்றுள்ளது” என்று கூறியுள்ளார்.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து தேசிய அளவில் உள்ள பல பாஜக பிரமுகர்கள் ஆதரவாக பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments