Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திரா காந்தியைப் போல் நான் கொல்லப்படலாம் – அரவிந்த் கெஜ்ரிவால் அச்சம்!

Webdunia
சனி, 18 மே 2019 (18:47 IST)
நான் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி போல எனது பாதுகாவலராலே கொல்லப்படலாம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லிக்கு மாநில அந்தஸ்து கேட்டு போராடி வருகிறார். டெல்லியில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகியக் கட்சிகளுக்குப் போட்டியாக இருந்து வருகிறார். இரண்டு கட்சிகளையும் சரமாரியாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில் பஞ்சாப்பில் உள்ள ஒரு ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவர், ‘இந்திரா காந்தி அவரது பாதுகாவலரால் கொல்லப்பட்டது போன்று என்னையும் பா.ஜனதா என்னுடைய பாதுகாவலரை வைத்து கொலை செய்யலாம். என்னுடைய பாதுகாவலர்களிடம் இருந்து பாஜக தகவல்களைப் பெற்று வருகிறது. பாஜக என்றாவது ஒருநாள் என்னைக் கொல்லலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஜூன் 4ஆம் தேதிக்கு பின் ராகுல் காந்தி ஒரு யாத்திரைக்கு செல்வார்.. அமித்ஷா கிண்டல்..!

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: பாஜகவின் 2 பிரபலங்கள் ஆஜராக சிபிசிஐடி சம்மன்..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. இன்று எத்தனை மாவட்டங்களில் கனமழை?

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments