Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40 ஆயிரம் கோடியை காப்பாற்றவே இந்த நாடகம்! – பாஜக தலைவர் விட்ட கதை!

Webdunia
திங்கள், 2 டிசம்பர் 2019 (17:26 IST)
மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றதே 40 ஆயிரம் கோடியை காப்பாற்றதான் என பாஜக மூத்த தலைவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பாஜக மூத்த தலைவர் அனந்த்குமார் ஹெக்டே மத்திய அரசின் 40 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட நிதி தொகை தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பில் இருந்ததாகவும், தற்போது பதவியேற்க இருக்கும் சிவசேனா கூட்டணி அந்த பணத்தை எடுத்து வளர்ச்சி திட்டங்களுக்கு செலவிடாமல் தவறாக பயன்படுத்த நேரிடும் என்பதாலேயே பட்னாவிஸ் அவசரமாக பதவியேற்றார் என்றும், தற்போது அந்த பணம் பாதுகாக்கப்பட்டு விட்டதாகவும், அதற்காகவே இந்த 4 நாள் முதல்வர் நாடகம் என்றும் பேசியுள்ளார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு பதிலளித்துள்ள தேவேந்திர பட்னாவிஸ் அப்படி எதுவும் நடக்கவில்லை, அனந்த்குமார் ஹெக்டேவின் இந்த கருத்து முற்றிலும் தவறானது என மறுப்பு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments