Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதார் அட்டை முட்டாள்தனமானது: ஆதாரை கொண்டு வந்த முன்னாள் அமைச்சர் கருத்து

Webdunia
செவ்வாய், 30 ஜனவரி 2018 (02:01 IST)
இன்று இந்திய குடிமகன் ஒவ்வொருவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று கூறப்படும் ஆதார் அட்டையை, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அப்போதைய மத்திய அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் என்பவர் கொண்டு வந்தார்.

ஆனால் ஆதார் அட்டை குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறிய ஜெய்ராம் ரமேஷ், 'ஆதார் அட்டை என்பது முட்டாள்தனமானது என்று கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த ஆதார் திட்டமானது சமூக நலத்திட்டங்களின் பயன்களை பொதுமக்கள் பெறுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும், இதன்மூலம் சமூக நலத்திட்டங்களில் நடைபெறும் மோசடிகளை ஒழிக்க மட்டுமே திட்டமிட்டதாகவும் கூறினார்.

ஆனால் தற்போது அதே ஆதார் அட்டையை விமான பயணச்சீட்டுகள் பெற, வங்கிக் கணக்குகள் தொடங்க, போன் இணைப்புகள் பெற உள்பட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும், இதனை தான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுனிதா வில்லியம்ஸ்க்கு சொந்த பணத்தில் சம்பளம்.. ட்ரம்ப் அறிவிப்பு..!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்.. முழு விவரங்கள்..!

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயில்.. போக்குவரத்து துறை வெளியிட்ட நெறிமுறைகள்..!

நீதிபதி யஷ்வந்த் வர்மா எந்த வழக்கையும் விசாரிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments