Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ.பி. இடைத்தேர்தல் - பாஜகவிற்கு பின்னடைவு

Webdunia
புதன், 14 மார்ச் 2018 (13:03 IST)
லோக்சபா இடைத் தேர்தல் நடைபெறும் இரண்டு தொகுதிகளிலும் பாஜக பெரும் சரிவை சந்திதுள்ளது பாஜகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

 
லோக்பூர் லோக்சபா உறுப்பினராக இருந்த யோகி ஆதித்யநாத்,  உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதால், உத்தரபிரதேசம் மாநில முதலமைச்சரானார். அதேபோல், பல்பூர் தொகுதி உறுப்பினராக இருந்த கேசவ் பிரசாத் மவுரியா துணை முதல்வரானார். எனவே, அவர்கள் இருவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததால், காலியாக இருந்த இரு தொகுதிகளுக்கும் கடந்த 11ம் தேதி தேர்தல் நடந்தது.
 
அந்த தொகுதிகளில் பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவியது. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி கோரக்பூர் தொகுதில் சமாஜ்வாதி வேட்பாளர் பிரவீன்குமார் நிஷாத்தும், பல்பூர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங்கும் பாஜக வேட்பாளர்களை விட முன்னிலையில் உள்ளனர்.
 
தற்போது உ.பியில் முதல்வராக உள்ள யோகி ஆதித்யநாத், கடந்த 5 தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்ற தொகுதி கோரக்பூர். ஆனால், தற்போது அங்கு பாஜக தோல்வியை சந்தித்துள்ளது பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments