Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிடிவி தினகரன் டெல்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

Webdunia
புதன், 14 மார்ச் 2018 (12:26 IST)
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக எழுந்த வழக்கில், டெல்லி நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் இன்று ஆஜரானார்.
 
இரட்டை இலை சின்னத்தை பெற, டெல்லியை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலமாக ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும், அதற்காக ரூ.10 கோடியை முன்பணமாக கொடுக்கப்பட்டதாகவும், டிடிவி தினகரன் மற்றும் அதற்கு உடைந்தையாக இருந்த அவரின் நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார் அவர்களை கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தனர்.
 
பின்பு அவர்கள் இருவர் தரப்பிலும் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனா ஆகிய இருவரும் ரூ.5 லட்சம் செலுத்தி சொந்த ஜாமீனில் செல்லலாம் என தீர்ப்பளித்தது.  

இந்நிலையில் இன்று  டெல்லி நீதிமன்றத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா ஆஜராகியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.66 ஆயிரத்தை தாண்டி ரூ.67 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை.. இதுவரை இல்லாத உச்சம்..!

சாலைகளில் தொழுகை நடத்தினால் ஓட்டுநர் உரிமம் ரத்து: போலீசார் எச்சரிக்கை

நான் முதலமைச்சரா..? என்கிட்ட இப்படி கேக்கலாமா? - எகிறிய புஸ்ஸி ஆனந்த்!

மதுரை திருமலை நாயக்கர் மகால் தூணை தொட்டால் அபராதம்.. அதிரடி அறிவிப்பு..!

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு.. உறுதியாகிறது கூட்டணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments