Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லாரும் டூர் போய்டாங்கப்பா அதுனாலதான் தோத்துத்டோம் - பாஜக அமைச்சரின் அறிவார்ந்த விளக்கம்

Webdunia
சனி, 2 ஜூன் 2018 (10:31 IST)
உத்தரப்பிரதேசம் கைரணா தொகுதியில் நடைபெற்ற தேர்தலின் போது, தொண்டர்கள் அனைவரும் டூர் சென்றுவிட்டதால் தான் பாஜக தோல்வி அடைந்தது என பாஜக அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் கைரணா மக்களவை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் மிரிகங்கா சிங் தோல்வி அடைந்தார். காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, பிஎஸ்பி, ஆதரவு பெற்ற ராஷ்டிரிய லோக் தள் வேட்பாளர் தபசம் ஹசன் வெற்றி பெற்றுள்ளார். இந்துப் பெரும்பான்மை தொகுதியான கைரணாவில் ஒரு இஸ்லாமியர் வெற்றி அடைந்திருப்பது பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் நூர்புர் சட்டசபை தொகுதியும் பாஜக தோல்வியடைந்தது.
 
எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டதே பாஜகவின் தோல்விக்கு காரணம் என அனைவரும் கூறிக்கொண்டிருக்க, உத்திரபிரதேச பாஜக அமைச்சர் லக்‌ஷ்மி நாராயன் சவுத்திரி கோடை விடுமுறை என்பதால் தொண்டர்கள் அனைவரும் குழந்தைகளுடன் வெளியூருக்கு டூர் சென்றுவிட்டதால் தான் இடைத்தேர்தலில் தோற்றோம் என கூறியுள்ளார். அமைச்சரின் இந்த விளக்கத்தை பலரும் கேலி செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments