இந்தியா கண்ட பொறுப்பற்ற அரசியல்வாதி நீங்கள்! – ராகுல் காந்தி மீது பாஜக காட்டம்!

Webdunia
வெள்ளி, 19 ஜூன் 2020 (14:52 IST)
சீனா – இந்தியா எல்லை மோதல் விவகாரத்தில் பிரதமரை தொடர்ந்து விமர்சித்து வருவதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மீது பாஜக செய்தி தொடர்பாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீனா – இந்திய ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் எழுந்துள்ளது. இந்த பிரச்சினையை பேச்சு வார்த்தை மூலம்  தீர்க்க இருநாட்டு அதிகாரிகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் சீன விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் சீனா ராணுவத்திடம் நடந்த தாக்குதல் குறித்து ராகுல்காந்தி ட்விட்டர் மூலமாக தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார். தொடர்ந்து பிரதமர் மோடி குறித்தும் அவர் பதிவிடும் கருத்துகளுக்கு பாஜகவினரிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா ”பிரதமர் மோடி தலைமையிலான அரசு, கொரோனா, எல்லை பிரச்சினை, காங்கிரஸ் உள்ளிட்ட மூன்று பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. எல்லை பிரச்சினை குறித்து பேச அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டவுள்ள நிலையில் ராகுல் காந்தி தொடர்ந்து பிரதமர் குறித்து ட்விட்டரில் பதிவிடுவது அவரது முதிர்ச்சியற்ற தன்மையை காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.

மேலும் “இந்தியா இதுவரை கண்டிராத மிகவும் பொறுப்பற்ற அரசியல்வாதி ராகுல்காந்தி. எதையும் படித்து பார்த்து புரிந்துகொண்ட பின் பேச வேண்டும். உங்கள் அரசியலை தொடங்க நாட்டின் பிரதமர் மீது ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை கூற வேண்டாம்” என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

காபி ரூ.700, தண்ணீர் பாட்டில் ரூ.100.. இப்படி விலை வைத்தால் தியேட்டர்கள் மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

குருநானக் கொண்டாட்டத்தில் பங்கேற்க இந்தியர்களுக்கு மறுப்பு: பாகிஸ்தான் அடாவடி..!

ஒரே நபர் மீண்டும் மீண்டும் வாக்களித்தபோது, முகவர்கள் ஏன் ஆட்சேபிக்கவில்லை? ராகுல் காந்திக்கு கேள்வி

ஓட்டுனர் உரிமத்துடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும்.. இணைக்காவிட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments