Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடிக்கு விருது வழங்கும் பில்கேட்ஸ்..

Arun Prasath
புதன், 18 செப்டம்பர் 2019 (19:53 IST)
தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் அறக்கட்டளை விருது வழங்கப்படவுள்ளது.

மோடியின் கடந்த ஆட்சியின் போது, மகாத்மா காந்தியின் கனவை நினைவாக்கும் வண்ணம் “சுவச் பார்த்” (தூய்மையான இந்தியா) என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் படி மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாளையொட்டி நாட்டில் தூய்மை பாதுகாப்பை அடைவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக தெரிய வருகிறது.

இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் கிராமங்களில் இலவச கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது எனவும், நாட்டில் 98 % கிராமப்புற சுகாதார பாதுகாப்பு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்த சாதனைக்காக, அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் பில்கேட்ஸின் மெலிந்தா அறக்கட்டளையின் “குளோபல் கோல்கீப்பர்” விருது அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வரும் 24 ஆம் தேதி, பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விருதினை குறித்து பிரதமர் மோடியை பலரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments