Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி சந்திப்பில் நடந்தது என்ன? மம்தா பானர்ஜி விளக்கம்

Webdunia
புதன், 18 செப்டம்பர் 2019 (19:45 IST)
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பிரதமர் மோடியும் கடந்த சில ஆண்டுகளாக எதிரும் புதிருமாக அரசியல் நடத்தி வந்தனர். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த பாராளுமன்றத் தேர்தலின் போதும் இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையான தாக்கி பிரச்சாரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற விழாவுக்கு கூட செல்லாத மம்தா, மோடியை சந்திப்பதை தவிர்த்து வந்தார்.
 
 
இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்திற்கு தேவையான நிதியுதவியை பெறவும் ஒரு சில திட்டங்களை அமல்படுத்தும் நோக்கத்திற்காகவும், இன்று பிரதமர் மோடியை, முதல்வர் மம்தா பானர்ஜி சந்திக்க திட்டமிட்டிருந்தார். அதன்படி இந்த சந்திப்பு இன்று டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நடந்தது
 
 
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, பிரதமருடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்ததாகவும், மேற்கு வங்கத்தில் தொடங்கப்பட உள்ள உலகிலேயே இரண்டாவது பெரிய நிலக்கரி சுரங்கத்தை திறந்துவைக்க மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறினார். மேலும் மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பங்ளா என மாற்றுவது தொடர்பாக அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார் 
 
 
முன்னதாக பிரதமரை சந்திக்க டெல்லி செல்வதற்காக கொல்கத்தா விமான நிலையத்திற்கு வந்தபோது அங்கு மோடியின் மனைவியை தற்செயலாக சந்தித்த மம்தா பானர்ஜி அவருக்கு புடவை ஒன்றை பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments