Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3ம் வகுப்பு மாணவரை துப்பாக்கியால் சுட்ட 5 வயது சிறுவன்! பீகாரில் அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran
புதன், 31 ஜூலை 2024 (14:33 IST)
பீகாரில் மூன்றாம் வகுப்பு  மாணவரை   அதே பள்ளியில் படிக்கும் ஐந்து வயது மாணவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் தான் பள்ளி மாணவர்கள் மத்தியில் துப்பாக்கி கலாச்சாரம் வளர்ந்துள்ளது என்பது குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அதே போன்ற ஒரு சம்பவம் பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலத்தில் தனது பையில் துப்பாக்கியை மறைத்து பள்ளிக்கு எடுத்துச் சென்ற ஐந்து வயது சிறுவன் திடீரென அந்த துப்பாக்கியை எடுத்து மூன்றாம் வகுப்பு மாணவனை சுட்டதாகவும் இதனால் அந்த மாணவனுக்கு கையில் காயம் அடைந்ததை எடுத்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து சிறுவன் கையில் துப்பாக்கி எப்படி வந்தது? என்று விசாரணை செய்யப்பட்டு வருவதாக அந்த பகுதியின் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களின் பைகளை சோதனை இட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments