Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை உயிருடன் மீட்பு

Webdunia
வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (08:12 IST)

பீகாரில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்புக்குழுவினர்  பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

பயன்படாத ஆழ்துளை கிணறுகளை மூடும்படி அரசு எவ்வளவு தான் கூறினாலும் இதனை பலர் கேட்பதில்லை. இதனால் விவரம் அறியாத குழந்தைகள் அதில் தவறி விழுந்து உயிரிழக்க நேரிடுகிறது.
 
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில்  3 வயது பெண் குழந்தை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகிலிருந்த 110 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டது. உடனடியாக இதுகுறித்து மீட்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத் துறையினர், குழந்தையை மீட்க தீவிரமாக முயற்சி செய்து வந்தனர். குழாய் வழியாக குழந்தைக்கு ஆக்‌ஷிஜன் மற்றும் உணவு வழங்கப்பட்டது.
இந்நிலையில் விடாமல் தொடர்ந்து 26 மணிநேர முயற்சிக்குப் பின் குழந்தை பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments