Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசோக சக்கரவர்த்தியின் வாரிசுகள் பாஜகவுக்கு ஆதரவு.. பீகார் தேர்தலில் திருப்பமா?

Siva
புதன், 11 ஜூன் 2025 (20:01 IST)
அசோக சக்கரவர்த்தியின் வாரிசுகள் வரும் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க உறுதி கொடுத்திருப்பதாக பீகார் மாநில துணை முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், காங்கிரஸ், பாஜக உள்பட அரசியல் கட்சிகள் பீகாரில் தங்கள் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டன. குறிப்பாக, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் அவ்வப்போது பீகார் மாநிலத்திற்குச் சென்று வருகின்றனர்.
 
இந்த நிலையில், பீகார் மாநில துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, பேரரசர் அசோகரின் வாரிசுகளை சந்தித்ததாகவும், அவர்கள் பாஜகவுக்கு முழு ஆதரவைத் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
 
ஜெகதேவ் பிரசாந்த் மற்றும் அவரது வம்சாவளியினர் பேரரசர் அசோகரின் வழித்தோன்றல்கள் என்று கூறப்படுகிறது. "கடந்த தேர்தலில் கூட பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், இந்த தேர்தலிலும் தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக தன்னிடம் கூறியதாக, துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி கூறியுள்ளார். 
 
இது பீகார் மாநில தேர்தலில் திருப்பத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ ரயில் திடீர் நிறுத்தம்.. பயணிகள் அதிருப்தி..!

பூட்டின் சாவியை முதல்வர் ஸ்டாலின் தொலைத்துவிட்டார் போல தெரிகிறது: ஈபிஎஸ் கிண்டல்..!

சிங்கப்பூர் கப்பல் வெடித்து சிதறினால் கேரளாவுக்கு ஆபத்தா? அதிர்ச்சி தகவல்..!

என் சகோதரியை தூக்கிலிடுங்கள்: தேனிலவு கொலையாளி சோனம் சகோதரர் பேட்டி..!

7 மாவட்டங்களில் அதிகனமழை: பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments