மேலும் ஒரு மாநில முதல்வருக்கு கொரோனா: தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை!

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (13:57 IST)
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்பட ஒரு சில மாநில முதல்வர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அதன் பின் குணமாகினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மாநில முதல்வருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் இதனையடுத்து அவர் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
கடந்த 4 நாட்களாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அவர்கள் கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவருக்கு சோதனை மேற்கொண்டபோது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், இதனையடுத்து முதல்வர் நிதிஷ்குமார் தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் 
 
இதனை அடுத்து தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வரும் நிதிஷ்குமார் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments