மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்: ஐபிஎல் வர்ணனையாளர் அதிரடி கைது..!

Siva
திங்கள், 6 அக்டோபர் 2025 (17:46 IST)
பிரபல போஜ்புரி நடிகர், ஐ.பி.எல். வர்ணனையாளர் மற்றும் யூடியூபர் மணி மெராஜ் என்பவரை காசியாபாத் போலீசார் பிகாரின் தலைநகர் பாட்னாவில் கைது செய்துள்ளனர்.
 
கோடிக்கணக்கான ஃபாலோயர்களை கொண்ட இவர் மீது, ஒரு பெண் யூடியூபர் பாலியல் பலாத்காரம், கட்டாய மதமாற்றம், கருக்கலைப்பு மற்றும் பல லட்சம் ரூபாய் மோசடி உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார்.
 
மணி மெராஜ் ஒரு போலி அடையாளத்தில் பழகி, மயக்க மருந்து கொடுத்து, திருமண ஆசை காட்டி தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக நீடித்த இந்த கொடுமையின்போது, தன்னை மதம் மாற சொல்லி வற்புறுத்தியதாகவும், மாட்டுக்கறி உண்ண கட்டாயப்படுத்தியதாகவும், கருக்கலைப்பு செய்ய நெருக்கடி கொடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
 
இவர் முன்னர் கசாப்புக் கடைக்காரராக பணியாற்றி, பின்னர் நகைச்சுவை வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் தான் இந்த மணி மெராஜ்.
 
பாதிக்கப்பட்ட பெண், மணி மெராஜுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 நாட்களுக்கு முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்.. தேர்தல் ஆணையர்..!

பீகார் தேர்தல் தேதி அறிவிப்பு.. எத்தனை கட்டம்? தேர்தல் முடிவு தேதி உள்பட முழு விவரங்கள்..!

தவெக மீது சில தவறுகள் இருந்தாலும் விஜய்யை குற்றவாளியாக்க கூடாது: அண்ணாமலை பேட்டி..!

ரூ.249 ரீசார்ஜ் ப்ளானை நீக்கிய வோடபோன் ஐடியா.. அதுக்கு பதிலா? - பயனர்கள் அதிருப்தி!

காலாண்டு முடிந்து வந்த மத்திய கல்வி நிதி! மாணவர் சேர்க்கை அறிவித்த தமிழக அரசு!

அடுத்த கட்டுரையில்