Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா முழுவதும் வேலை நிறுத்தம் : நாடே முடங்கும் அபாயம்

இந்தியா முழுவதும் வேலை நிறுத்தம் : நாடே முடங்கும் அபாயம்

Advertiesment
இந்தியா முழுவதும் வேலை நிறுத்தம் : நாடே முடங்கும் அபாயம்
, புதன், 31 ஆகஸ்ட் 2016 (19:11 IST)
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி அனைத்து தொழிற்சங்கங்கள் நாளை மறுநாள் நடத்த உள்ள வேலை நிறுத்தத்தில் இந்தியா முழுவதும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.15ஆயிரம் வழங்க வேண்டும்  என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தியாவில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.

இந்த வேலை நிறுத்தத்தில்,  இந்தியாவில் உள்ள முக்கிய வங்கிகள் உட்பட நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பணிகளில் உள்ள 15 கோடி ஊழியர்கள் பங்கேற்க உள்ளதால் ஏராளமான பாதிப்புகள் ஏற்படும் எனத் தெரிகிறது..

சாலை போக்குவரத்து, மின் வினியோகம், மின்சாரம், சுரங்கம், பாதுகாப்பு, டெலிகாம் மற்றும் இன்சூரன்ஸ் துறைகள், சமையல் எரிவாயு வினியோகம் அனைத்தும் பாதிக்கும். அதேபோல், வங்கிகள், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மூடப்படுகிறது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் சங்கங்களுக்கு ஆட்டோ மற்றும் டாக்சி யூனியன்களும் ஆதரவு தெரிவித்துள்ளது. எனவே அவற்றின் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், ரயில்வே சங்கங்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. எனவே ரயில் போக்குவரத்து வழக்கம் போல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓலா டாக்ஸி டிரைவர்கள் அட்டூழியம்: 12 வயது சிறுமி வன்கொடுமை