Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன் அனுபவம் இல்லாமலே விமானி ஆகலாம்! ஏர் இந்தியா தொடங்கும் விமான பயிற்சி பள்ளி!

Prasanth Karthick
செவ்வாய், 18 ஜூன் 2024 (09:51 IST)
இந்தியாவில் விமான பயிற்சிகளுக்கான புதிய பள்ளியை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்க உள்ள நிலையில் ஆண்டுக்கு 180 பேருக்கு விமான பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.



இந்தியாவிலிருந்து ஏர் இந்தியா உள்பட பல நிறுவனங்களை சேர்ந்த உள்நாட்டு, பன்னாட்டு விமான சேவைகள் நடந்து வருகின்றன. ஆனால் விமான சேவைகள் அதிகரித்துவிட்ட அளவிற்கு விமான பயிற்சி பள்ளிகள் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விமான பயிற்சி பெற விரும்பும் பல மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விமான பயிற்சி பெறும் சூழல் உள்ளதாக தெரிவித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், அந்த காரணத்தால் இந்தியாவில் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் பிரத்யேகமான பயிற்சி பள்ளியை நிறுவ உள்ளதாக தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அமராவதியில் இதற்கான பயிற்சி மையத்தை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு ஆண்டுக்கு 180 பேருக்கு விமான பயிற்சி அளிக்க உள்ளதாகவும், இந்த பயிற்சிகளில் சேர முன் அனுபவம் தேவையில்லை என்றும், தகுதி, ஆர்வமுள்ளவர்கள் இப்பள்ளியில் முழுநேர பயிற்சியில் சேர்ந்து விமானி ஆகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments