Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 26 April 2025
webdunia

லாக்டவுனால் கைமேல் பலன்: குறைகிறது கொரோனா பாதிப்பு!

Advertiesment
கொரோனா
, செவ்வாய், 11 மே 2021 (11:40 IST)
இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனை அடுத்து தற்போது படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3.29 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் ஆனால் அதே நேரத்தில் கொரோனாவில் இருந்து இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை பாதிப்பு எண்ணிக்கையைவிட அதிகமாக அதாவது 3.56 லட்சம் பேர் குணமடைந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கொத்துக்கொத்தாக மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றனர் என்பதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு, வெண்டிலேட்டர் தட்டுப்பாடு ஆகியவை இன்னும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ஆனால் அதே நேரத்தில் நான்கு லட்சத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு இருந்த இந்தியாவில் தற்போது 3.29 லட்சம் என்பது பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது என்பது லாக்டவுன் காரணமாகத்தான் இது சாத்தியமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் இன்னும் 15 அல்லது 30 நாட்களுக்கு லாக்டவுன் இருந்தால் ஒரு லட்சத்திற்கும் குறைவாக தினமும் தினசரி பாதிப்பு வந்துவிடும் என்றும் மருத்துவர்கள் கூறி வருகின்றனர்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பில்கேட்ஸ் தம்பதிகள் விவாகரத்துக்கு இவர்தான் காரணமா? அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட செய்தி!