Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாணமும், கோமியமும் சாப்பிடுவதால்....புதிய நோய்

Advertiesment
eating dung
, செவ்வாய், 11 மே 2021 (22:27 IST)
சாணமும், கோமியமும் அருந்துவதால் புதிய நோய்கள் மனிதர்களுக்குப் பரவும் வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவக் கவுன்சில் எச்சரித்துள்ளது.

இந்தியாவில் ஒருநாளில் சுமார் 4 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
கொரொனா தடுப்பூசியாக கோவிஷீல்ட், வேக்‌ஷின் போன்றவை பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் வடமாநிலங்களில் சில மாட்டும் சாணமும், மோகியமும் கொரோனாவைத் தடுக்கும் என அதை உண்டு வருகின்றனர். இப்படி மாட்டும் சாணமும், மோகியமும் அருந்துவதால் புதிய நோய்கள் மனிதர்களுக்குப் பரவும் வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவக் கவுன்சில் எச்சரித்துள்ளது.

மேலும், குஜராத் மாநிலம் அகமதாபாத் உள்ள ஒரு கோவியில் பக்தர்கள் உடம்பில் மாட்டுச்சாணம் மற்றும் கோமியத்தை உடலில் பூசிக் கொள்ளும் வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

 

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3 மாநிலங்களவை இடங்களை கைப்பற்ற திமுகவுக்கு வாய்ப்பு