Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு வந்த ஏலியன்கள்! – வைரலான வீடியோவின் உண்மை பிண்ணனி!

Webdunia
புதன், 20 நவம்பர் 2019 (17:49 IST)
சமீப காலமாக ஏலியன்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையங்களில் வைரலாகி வருகின்றன. அவற்றில் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் சித்தரிக்கப்பட்டவையாகவோ அல்லது காட்சி பிழையாகவோ இருந்து விடுகின்றன.

ஏலியன்களின் பறக்கும் தட்டுகள் வானத்தில் தெரிவது, ஏலியன்கள் சாலையில் நடந்து போவது போன்ற வீடியோக்கள் இணையத்தில் ஏராளமாக குவிந்து கிடக்கின்றன. அப்படி இணையத்தில் பகிரப்பட்ட ஒரு ஏலியன் வீடியோ இணையத்தில் சமீப காலமாக ட்ரெண்டாகி வருகிறது.

ஆனால் ஏலியன் பறக்கும் தட்டிலோ, சாலையிலோ அல்ல, ஒரு வீட்டு மேல்தளத்தில் இருக்கிறது. உண்மையாக அது ஒரு ஏலியனே அல்ல. ஏலியன் போன்ற கருமை நிறமான பெரிய கண்களை கொண்டு பார்க்கவே வித்தியாசமாக தோன்றும் அவை பிறந்து சில நாட்களே ஆன ஆந்தை குட்டிகள்.

இந்த ஆந்தை குட்டிகளின் வீடியோ விசாகப்பட்டிணத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதை சில சமூக வலைதளங்களில் “இந்தியாவில் ஏலியன்” என்ற பெயரில் பலர் பதிவிட்டு வர, அதற்கு விளக்கம் கொடுத்த நேரு உயிரியல் பூங்கா ஆய்வாளர்கள் “அது ஏலியன் அல்ல. இந்தியாவின் டைட்டோனிடே குடும்பத்தை சேர்ந்த கூகை ஆந்தை” என்று விளக்கமளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments