Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏடிஎம்-ல் நான்கு முறைக்கு மேல் பணம் எடுப்பீர்களா? அப்ப இதை கண்டிப்பா படிங்க

Webdunia
வியாழன், 2 மார்ச் 2017 (05:34 IST)
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றாகிய டிஜிட்டல் இந்தியாவுக்கு முழுவடிவம் கொண்டு வரும் வகையில் அனைத்து பண பரிவர்த்தனைகளையும் டிஜிட்டல் முறைக்கு கொண்டு வர மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.



 


எனவே கடந்த சில மாதங்களாக ஏடிஎம்-ல் எத்தனை முறை பணம் எடுத்தாலும்
பரிவர்த்தனை கட்டணம் இல்லை என்ற நிலை மாறி இனிமேல் ஏடிஎம்-ல்  மாதம் ஒன்றுக்கு நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.150 கட்டணம் பிடிக்கப்படும் என வங்கிகள் அறிவித்துள்ளன.

அதேபோல் மாதம் ஒன்றுக்கு நான்கு முறைக்கு மேல் வங்கிக்கணக்கில் பணம் எடுத்தாலோ அல்லது டெபாசிட் செய்தாலோ அதற்கும் பரிவர்த்தனை கட்டணம் வசூல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டணம் டெபாசிட் அல்லது எடுக்கப்படும் பணத்தின் அளவை பொறுத்து ரூ.150 முதல் ரூ.500 வரை பிடித்தம் செய்யப்படும் என்றும் இருப்பினும் பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும், ஒரு மாதத்தில் ஒரு லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை செய்பவர்கள் மட்டுமே இதனால் பாதிக்கப்படுவார்கள் என்றும் வங்கித்தரப்பில் கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments