Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்லாத காசோலைகள்... பயனர்களுக்கு நல்ல சேதி சொன்ன வங்கி!

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (08:16 IST)
இணைக்கப்பட்ட வங்கிகளின் காசோலைகள் ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குப் பிறகும் செல்லும் என வங்கி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
கடந்த ஆண்டு ஓரியண்டல் வங்கி, யுனைடெட் இந்தியா வங்கி, பஞ்சாப் நேஷ்னல் வங்கியுடனும், சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியுடன் இணைக்கப்பட்டது. அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்டது. ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 
 
இந்நிலையில் சமீபத்தில் இந்த இணைக்கப்பட்ட வங்கிகளின் பழைய காசோலைகள் (Cheque) செல்லாது என அறிவிக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் புதிய காசோலைகளை பெற்றுக்கொள்ளுமாறு தகவல் ஒன்று வெளியானது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் இருந்தனர். 
 
ஆனால் தற்போது வங்கி தரப்பில், பழைய காசோலைகள் நிறுத்தப்படாது, அதற்கு கால அவகாசம் வழங்கப்படும். அதாவது இணைக்கப்பட்ட வங்கிகளின் காசோலைகள் ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குப் பிறகும் செல்லும். அதே சமயம் புதிய காசோலைகளையும் அவசியம் பெற்றுக்கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments