Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

Advertiesment
மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

Siva

, சனி, 22 மார்ச் 2025 (17:56 IST)
வங்கிக் கிளைகளில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக மாற்ற வேண்டும், வங்கிகளில் வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலை நடைமுறையில் கொண்டு வர வேண்டும் ஆகிய முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதும் மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.
 
இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் 9 வங்கி ஊழியர் சங்கங்களை உள்ளடக்கிய அனைத்து வங்கி சங்கங்கள் மன்றம் (யு.எப்.பி.யு.) மற்றும் தலைமை தொழிலாளர் ஆணையர் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
 
இந்த சந்திப்பின்போது, தொழிலாளர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளுக்கு அரசுத் தரப்பில் சாதகமான உத்தரவாதம் அளிக்கப்பட்டதால், வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்ததாக யு.எப்.பி.யு. வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாமிக்கு ஆரத்தி எடுப்பதில் பூசாரிகளுக்குள் சண்டை.. கத்திக்குத்தால் ஒருவர் கொலை..!