Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி கணக்கில் குறைந்தபட்ச தொகை; வாடிக்கையாளர்களுக்கு அபராதம்

Webdunia
ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2018 (16:08 IST)
வங்கி கணக்கில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 
2017-2018ஆம் ஆண்டின் குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.4988 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. 
 
இதுறித்து மத்திய நிதித்துறை இணை மத்திரி பிரதாப்சுல்கா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
2017-18 நிதியாண்டில் ஜன்தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் ரூ.4988 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டது.
 
ஸ்டேட் வங்கி அதிகபட்சமாக ரூ.2434 கோடி அபராதமாக வசூலித்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக எச்.டி.எப்.சி.  வங்கி ரூ.590 கோடியும், ஆக்சிஸ் வங்கி ரூ.530  கோடியும், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ரூ.317 கோடியும், பஞ்சாப் நே‌ஷனல் வங்கி ரூ.211 கோடியும் அபராதமாக வசூலித்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments