Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிசம்பர் 26 வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2018 (13:38 IST)
வங்கிகள் இணைப்பிற்கு எதிராக வங்கி ஊழியர்கள் வரும் டிசம்பர் 26 ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பேங்க் ஆஃப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகிய மூன்று  வங்கிகளையும் ஒரே வங்கியாக இணைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.. இந்த வங்கிகள் இணைப்பைக் கண்டித்து வங்கிகள் அனைத்தும் வரும் 26-ம் தேதி வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளன. இந்த வேலை நிறுத்தத்தை வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பு நடத்துகிறது.

இதுகுறித்து வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு கூறியது ‘வங்கிகளை இணைக்க முடிவு செய்துள்ள அரசும் வங்கிகளும் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றிற்கு எதிராக இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துகிறோம். எங்கள் கூட்டமைப்பில் உள்ள அனைத்து தனித்தனி யூனியனை சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொள்வார்கள்’ என அறிவித்துள்ளது.

இந்த மூன்று வங்கிகளும் அதிகளவில் வாராக்கடனில் சிக்கியுள்ளதாகவும் இவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் இந்தியாவின் மூன்றாவது பெரிய வங்கியாக இவற்றை மாற்ற முடியும் என அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்.. முதல்வரின் ட்வீட் குறித்து கேலி செய்த ஈபிஎஸ்..!

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments