Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு கடத்தப்பட்ட போதிலும் மீண்டும் சட்டவிரோதமாக குடியேற்றம்.. 3 பேர் கைது..!

Mahendran
புதன், 12 மார்ச் 2025 (11:07 IST)
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டு, அதன் பின்னர் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நாடு கடத்தப்பட்ட மூவர் மீண்டும் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற போது, அவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
டெல்லி உள்பட இந்தியாவின் பல பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வங்கதேசத்தினர் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், டெல்லி பீராகார்கி என்ற பகுதியில் உள்ள காளி கோவில் முன்பு சந்தேகத்திற்கிடமாக மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர்.
 
அவர்களிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று கூறினர். ஆனால், அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தியபோது, அவர்கள் வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்பதும், ஏற்கனவே இந்தியாவில் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக நாடு கடத்தப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.
 
தற்போது மீண்டும் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளதாகவும், அவர்களின் வாக்குமூலம் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த தகவல் காவல்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 
இதனை அடுத்து, மீண்டும் அவர்களை வங்கதேசத்துக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் சந்தேகத்திற்கு உரியவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும், வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்காளர் பட்டியல் மோசடி குற்றச்சாட்டு.. குரங்குகள் நீதிமன்றம் செல்லலாம்.. சுரேஷ் கோபி சர்ச்சை கருத்து

ராஜஸ்தான் மாநிலம் ஒரு நீல நிற பிளாஸ்டிக் பேரலுக்குள் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமாவளவன் சொல்வது ஏற்புடையது அல்ல.. கம்யூனிஸ்ட் கட்சி சண்முகம் கண்டனம்..!

ஓடும் காரின் கண்ணாடியை உடைத்து கொண்டு பாய்ந்த மான்.. மிஸ் யுனிவர்ஸ் அழகி பரிதாப பலி..!

எம்.எல்.ஏ வீட்டின் முன் திடீரென போராட்டம் நடத்திய ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments