Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேச வெள்ளத்திற்கு இந்தியாவே காரணம்.. ஊடகங்கள் செய்தியால் பரபரப்பு..!

Mahendran
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (11:33 IST)
வங்கதேசத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்திற்கு இந்தியா தான் காரணம் என வங்கதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ள நிலையில் இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது
 
இந்தியாவின் திரிபுராவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் திரிபுரா மாநிலத்தில் உள்ள டம்பூர் என்ற அணை முன்னறிவிப்பு இன்று திறக்கப்பட்டது. இந்த நிலையில் அணையை முன்னறிவிப்பு இன்றி இரவோடு இரவாக திறந்து விட்டது தான் வங்கதேசத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்துக்கு காரணம் என அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து வங்கதேச ஊடகங்களின் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. திரிபுராவில் உள்ள கும்டி ஆற்றின் மேல் பகுதியில் உள்ள டம்பூர் அணை திறக்கப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக வங்கதேச  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது உண்மை அல்ல.

கும்டி ஆற்றின் நிர்ப்பிடிப்பு பகுதிகளில் கலந்து சில நாட்களாக மிக அதிக மழை பெய்து உள்ளதே வெள்ளத்துக்கு காரணமே தவிர அணை திறக்கப்பட்டது காரணம் அல்ல என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக முதல் ஆண்டுவிழா, பொதுக்கூட்டம் எங்கே? எப்போது? முக்கிய தகவல்..!

திருமண மண்டபத்தில் திடீரென புகுந்த சிறுத்தை.. காருக்குள் ஒளிந்து கொண்ட மணமக்கள்..!

இலங்கையில் காற்றாலை அமைக்கும் திட்டம் இல்லை: முடிவை கைவிட்ட அதானி..!

அமைச்சரவையில் திடீர் மாற்றம்: ராஜ கண்ணப்பன், பொன்முடிக்கு என்னென்ன துறைகள்?

முதல்வர் ராஜினாமா எதிரொலி: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments