Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன ஒரு வேகம்: பிறந்து 2 நிமிடமே ஆன குழந்தைக்கு ஆதார் அட்டை

Webdunia
வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (13:40 IST)
இந்திய குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டை என்பது கட்டாயம் என்றும், ஆதார் அட்டையை அனைத்து முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
 
இருப்பினும் இன்னும் பலர் ஆதார் அட்டையை எடுக்காமல் உள்ளனர். இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 18ஆம் தேதி பிறந்த ஒரு குழந்தைக்கு பிறந்த 1.48 நிமிடத்திற்குள் ஆதார் அட்டை கிடைத்துவிட்டது.
 
இந்தியாவின் இளைய குடிமகள் என்ற பெருமையை பெற்றுள்ள அந்த குழந்தையின் தந்தை இதுகுறித்து கூறியதாவது, 'என்னுடைய நண்பர்கள் மற்றும் ஆதார் அட்டை அலுவலக அதிகாரிகளுடன் இணைந்து பிறந்தவுடனே எனது குழந்தைக்கு ஆதார் அட்டை கிடைக்க ஏற்பாடு செய்திருந்தேன். அதன்படி குழந்தை பிறந்த அடுத்த நிமிடமே பெற்றோர்களின் ஆதார் அட்டை எண்கள் மற்றும் குழந்தையின் புகைப்படத்தை ஆதார் விண்ணப்பிக்கும் இணையதளத்தில் அப்லோடு செய்தேன். அடுத்த நிமிடமே என் குழந்தைக்கு ஆதார் கிடைத்துவிட்டது என்று கூறினார்.
 
5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆதார் அட்டை பெற கைரேகை, கருவிழிப் படலம் ஆகியவை தேவையில்லை என்பதும். குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் ஆதார் எண்கள் ஆகியவை போதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments