Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனி குழந்தைகளுக்கும் பர்த் சீட்: வடக்கு ரெயில்வே புதிய முயற்சி

birthseat
, செவ்வாய், 10 மே 2022 (13:04 IST)
இனி குழந்தைகளுக்கும் பர்த் சீட்: வடக்கு ரெயில்வே புதிய முயற்சி
தற்போது ரயில்களில் பெரியவர்களுக்கு மட்டுமே பர்த் சீட் இருக்கும் நிலையில் இனி குழந்தைகளுக்கும் பர்த் சீட் அமைக்கும் முயற்சியை வடக்கு ரயில்வே ஏற்பாடு செய்து வருகிறது 
 
பச்சிளம் குழந்தையுடன் பயணிக்கும் பெண்களுக்கு ஏதுவாக பேபி பர்த்சீட் இன்னும் கூடுதல் சீட் இணைக்கும் வசதியை வடக்கு ரயில்வே சோதனை முறையில் அமல்படுத்தி உள்ளது.இந்த முயற்சிக்கு பயணிகள் மத்தியில் குறிப்பாக பெண் பயணிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது
 
ரயிலில் பயணம் செய்யும்போது குழந்தைகளிடம் வரும் பெண்கள் பர்த்தில் தூங்கும் போது குழந்தைகளை கையில் அல்லது மடியில் வைத்துக் கொண்டு தூங்க வேண்டிய நிலை உள்ளது 
 
ஆனால் இந்த பேபி பெர்த் சீட்டில் குழந்தைகளை படுக்க வைத்து அதற்கான பெல்ட்டை மாட்டி விட்டால் குழந்தைகள் பயமின்றி நிம்மதியாக தூங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முயற்சி நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில்களிலும் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்வதேச விண்வெளியில் பதிவு செய்யப்பட்ட முதல் டிக்டாக் வீடியோ!