இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தேச நலனுக்கு எதிரானது: பாபா ராம்தேவ்

Webdunia
ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (11:53 IST)
உலக கோப்பை டி20 போட்டியில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே முக்கிய போட்டி நடைபெற உள்ள நிலையில் இந்த போட்டி தேச நலனுக்கு எதிரானது என பாபா ராம்தேவ் அவர்கள் கருத்து தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின்னர் தற்போதுதான் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த போட்டி குறித்து பாபா ராம்தேவ் கூறியபோது இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தேச நலனுக்கு எதிரானது, ராஷ்டிரிய தர்மத்திற்கு எதிரானது என்றும் பயங்கரவாதத்துடன் ஒருபோதும் நாம் கிரிக்கெட் விளையாட கூடாது என்றும் அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனை இன்னும் இருந்து கொண்டிருக்கும் நிலையில், மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் தொடர்பில் இருந்த நிலையில் பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவது சரியானது அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்சலுக்கு என்று முதல்முறையாக தனி ரயில்.. சென்னை - மங்களூரு இடையே முதல் ரயில்..!

மகனை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர பெற்ற தாயே கூறினாரா? லிவ்-இன் துணைவர் தூண்டுதலா?

மோடி முன் பேசிய ஐஸ்வர்யா ராய் கருத்துக்கு திமுக அமைச்சர் பாராட்டு: என்ன பேசினார்?

என் உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்.. மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலை செய்த 16 வயது மாணவன் கோரிக்கை..!

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: ஸ்பாட் புக்கிங் குறைப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments