Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தில் அய்யப்பன் பக்தர்களுக்கு கூடுதல் வசதி: அதிரடி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (17:26 IST)
விமானத்தில் பயணம் செய்ய அய்யப்பன் பக்தர்களுக்கு கூடுதல் வசதி செய்து தர விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த ஆண்டு சபரிமலைக்கு பக்தர்கள் பயணம் செய்து வருவதால் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 
 
இந்த நிலையில் சபரிமலை பக்தர்கள் அதிக அளவில் விமானத்தில் பயணம் செய்வதால் சென்னை - கொச்சி இடையே விமான சேவை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
அதுமட்டுமின்றி சபரிமலை அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டுக்குள் தேங்காய் வைத்து விமானத்தில் எடுத்துச் செல்லவும் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து அய்யப்பன் பக்தர்கள் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments