Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றைய நாள் மறைந்த பெண் மருத்துவருக்கு அர்ப்பணிக்கும் நாள்: மம்தா பானர்ஜி அறிவிப்பு..!

Mahendran
புதன், 28 ஆகஸ்ட் 2024 (13:27 IST)
கடந்த சில நாட்களுக்கு முன் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இன்றைய நாளை அதாவது ஆகஸ்ட் 28ஆம் தேதி உயிரிழந்த பெண் மருத்துவருக்கு அர்ப்பணிப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
 
கொல்கத்தாவில் நடந்த திரிணாமுல்  காங்கிரஸ் கட்சியின் மாணவரணி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் மம்தா பானர்ஜி ’கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொள்ளப்பட்ட சகோதரி மருத்துவ மாணவியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள், அவருக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டும், இந்தியா முழுவதும் இது போன்ற மனிதாபிமான செயல்களால் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் எனது அனுதாபங்கள்’ என்று கூறினார்,.
 
மேலும் திரிணாமுல்  காங்கிரஸ் கட்சியின் மாணவப் பிரிவு நிறுவப்பட்ட இந்த நாளை மறைந்த மருத்துவ மாணவிக்கு அர்ப்பணிக்கும் நாளாக அறிவிக்கிறேன். இந்த நாளில் அனைவரும் ஊக்கமாகவும்,  உறுதியுடனும் இருங்கள், நலமுடன் இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள், ஒளிமயமான எதிர்காலத்திற்காக உறுதியுடன் இருங்கள்’ என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பூரில் நடந்தது ஆணவக் கொலை இல்லை! - போலீஸார் கொடுத்த புது விளக்கம்!

வக்பு மசோதா.. வாக்கெடுப்பில் அதிமுக எம்பிக்களின் நிலை என்ன?

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி மேலாளர் தற்கொலை: அன்புமணி கண்டனம்..!

கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா: மயிலாப்பூரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

ஏப்ரல் 5 வரை வெளுத்து வாங்க போகும் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்