Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

Prasanth Karthick
திங்கள், 19 மே 2025 (12:10 IST)

தெலுங்கானாவில் ஏடிஎம் ஒன்றில் அதிகமான பணம் வெளிவந்ததால் மக்கள் பணம் எடுக்க குவிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

தெலுங்கானாவின் ஐதராபாத்தில் யாகுத் புரா என்ற பகுதியில் ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. நேற்று அந்த ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற ஒருவர் ரூ.3000 எடுப்பதற்காக கார்டை போட்டுள்ளார். ஆனால் அவருக்கு இன்ப அதிர்ச்சியாக ரூ.4 ஆயிரம் பணம் வந்துள்ளது. அவரது வங்கி கணக்கிலும் ரூ.3 ஆயிரம் மட்டுமே பிடித்தம் செய்யப்பட்டிருக்கிறது.

 

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வேகமாக பரவத் தொடங்கிய நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் ஏடிஎம் கார்டுகளை எடுத்துக் கொண்டு அங்கு ஓடியுள்ளனர். பலரும் தங்களிடம் இருந்த பணத்தை விட ரூ.1000 கூடுதலாக ஏடிஎம் மூலம் பெற்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்களிடையே தள்ளுமுள்ளும் நடந்துள்ளது.

 

சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீஸார் தடியடி நடத்தி மக்களை அங்கிருந்து அகற்றியுள்ளனர். பின்னர் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் வந்து ஏடிஎம் இயந்திரத்தை ஆய்வு செய்ததில் அதில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையே இதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து ஏடிஎம்மை அதிகாரிகள் பூட்டினர். அந்த ஏடிஎம்மிற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. லிப்டில் சிக்கிய நபர் பரிதாப பலி..!

மகாராஷ்டிர அரசியலில் வரலாறு காணாத திருப்பம்: ராஜ் - உத்தவ் தாக்கரே மீண்டும் கைகோர்க்கிறார்களா?

கச்சத்தீவு எங்களுக்கு சொந்தம்.. திருப்பி தர முடியாது: இலங்கை திட்டவட்ட அறிவிப்பு..!

உக்ரைன் மீது ரஷ்யாவின் வரலாறு காணாத ட்ரோன் தாக்குதல்: தலைநகர் கீவ் உட்பட பல நகரங்கள் இலக்கு!

பீகாரில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை: 3 ஆண்டுகளுக்கு முன் மகன் பலியான சோகம்: அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments