Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் முதல்முறையாக எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம்.. பயணிகள் வரவேற்பு..!

Siva
வியாழன், 17 ஏப்ரல் 2025 (07:55 IST)
இந்தியாவில் முதல்முறையாக எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம் மெஷின் நிறுவப்பட்டுள்ள நிலையில், இதற்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் இயக்கப்படும் பஞ்சவாடி எக்ஸ்பிரஸ் ரயிலில் பரிசோதனை முறையில் ஏடிஎம் மிஷின் வைக்கப்பட்டதாகவும், இது பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றால், இன்னும் சில ரயில்களிலும் ஏடிஎம் மிஷின் வைக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
தனியார் வங்கி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த குளிர்சாதன வசதி உள்ள ஏடிஎம்மில், பயணிகள் தேவைக்கு பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றும், சில இடங்களில் சிக்னல் பிரச்சனை காரணமாக ஏடிஎம் எந்திரம் இயங்காது என்றும், சுரங்கப்பாதை வழியாக செல்லும் போதும் ஏடிஎம் பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளது என்றும், இந்த சிக்கல்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 
ஆனால் பெரும்பாலான நேரங்களில் ஏடிஎம் வேலை செய்வதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். பேங்க் ஆப் மகாராஷ்டிரா இந்த ஏடிஎம் ஐ நிறுவியுள்ளதாகவும், ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
ரயில்வே துறையின் இந்த முயற்சிக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அடுத்தடுத்து பல ரயில்களில் இதேபோன்று ஏடிஎம் மிஷின்கள் நிறுவப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 
 Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments