Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுடச்சுட இட்சி, சட்னி வழங்கும் ATM!!

சுடச்சுட இட்சி, சட்னி வழங்கும் ATM!!
, ஞாயிறு, 16 அக்டோபர் 2022 (16:17 IST)
தென்னிந்திய உணவு வகைகளில் இட்லியும் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை.


லேசான, மென்மையான மற்றும் பஞ்சுபோன்ற இட்லிகள் உங்களை நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்க போதுமானது. இதை சாம்பாரில் அல்லது சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் அஹா ஒஹோ டேஸ்ட் தான். இப்போது, ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒரு தானியங்கி இட்லி தயாரிக்கும் இயந்திரத்தை பெங்களூரில் நிறுவியுள்ளது. இது தொடர்பான வீடியோ ட்விட்டரில் வெளியாகியுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர்களான ஷரன் ஹிரேமத் மற்றும் சுரேஷ் சந்திரசேகரன் ஆகியோரால் நிறுவப்பட்ட ஃப்ரெஷப் ரோபோட்டிக்ஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் இந்த இயந்திரம் தயாரிக்கப்பட்டது. 24X7 இயந்திரம் ஃப்ரெஷாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது 12 நிமிடங்களில் 72 இட்லிகளை வழங்க முடியும். இந்த இயந்திரம் பொடி மற்றும் சட்னி போன்ற சைட் டிஷ்களையும்  வழங்குகிறது.

செயல்முறை எளிதானது, வீடியோவில் காட்டப்பட்டுள்ளபடி மெனுவைப் பெற QR குறியீட்டை ஸ்கேன் செய்து, உங்கள் ஆர்டரைச் செய்து பணம் செலுத்துங்கள். இட்லிகள் புதிதாக டெலிவரி செய்யப்பட்டு சுமார் 55 வினாடிகளில் பேக் செய்யப்படும்.

தென்னிந்திய காலை உணவுக்கான முதல் தானியங்கி சமையல் மற்றும் விநியோக இயந்திரம் இதுவாகும். இப்போதைக்கு, இந்த ஏடிஎம் பெங்களூரில் இரண்டு இடங்களில் கிடைக்கிறது, மேலும் இதை மற்ற முக்கிய மையங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர்.
 
Edited By: Sugapriya Prakash

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விருந்துக்காக தாய்மாமன் வீட்டுக்கு சென்ற புதுமண தம்பதிகள் பரிதாப பலி: தேனியில் அதிர்ச்சி சம்பவம்!