Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏடிஎம் கட்டணம் உயர்வு: இனி பார்த்து பயன்படுத்துங்க...!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (11:25 IST)
ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம் ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து உயர்த்தபடுவதற்கு மத்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. 

 
வாடிக்கையாளர்கள் ஏடிஎம்-களில் ஒரு மாதத்துக்கு 5 முறை கட்டணமின்றி, பணம் எடுக்க முடியும். இந்த லிமிட்டை தாண்டி ஏடிஎம்-களில் பணம் எடுத்தால் தற்போது ரூ.20 மற்ற வங்கி ஏடிஎம்களின் பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி உடன் ரூ.23.6 பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் இதில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு ஆர்பிஐ அனுமதி வழங்கி உள்ளது. 
 
ஆம், இலவச பரிவர்த்தனைகளை தாண்டி பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்குமான கட்டணம் ரூ.20 இருந்து ரூ.21 அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்ற ஏடிஎம்களை பயன்படுத்தினால் ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி உடன் ரூ.25 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஏற்கனவே ஹெச்.டிஎஃப்.சி மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகள் கட்டணத்தை அதிகரித்துள்ள நிலையில் ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து மற்ற வங்கிகளும் உயர்த்த இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments