Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நம்மை விமர்சிப்பவர்கள் தேசவிரோதிகள் இல்லை – மோடிக்கு அத்வானி அறிவுரை !

நம்மை விமர்சிப்பவர்கள் தேசவிரோதிகள் இல்லை – மோடிக்கு அத்வானி அறிவுரை !
, வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (12:47 IST)
5 ஆண்டுகளாக தனது பிளாக்கில் எதுவும் எழுதாத மோடி நேற்று பாஜக்வின் தற்போதைய போக்கை விமர்சித்து எழுதியுள்ளார்.

பாஜகவில் மோடியை ஒரு மிகப்பெரிய தலைவராக மாற்றியதில் அத்வானிக்கு மிகப்பெரிய பங்குண்டு. அதேப்போல மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கும் அத்வானி மிகப்பெரிய அளவில் அழுத்தம் கொடுத்தார். குஜராத் கலவரத்தின் போது மோடி மீது பாஜ தலைமைக் கோபத்தில் இருந்த போது அத்வானிதான் அவரைக் காப்பாற்றினார். ஆனால் மோடி பிரதமரான பின்பு அத்வானியை ஒதுக்க ஆரம்பித்தார். இதனால் கட்சியில் இருந்தே அத்வானி ஓரங்கட்டப்பட்டார்.

மக்களவைத் தேர்தலிலும் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. பல முறை அவர் நின்று வெற்றிபெற்ற குஜராத் காந்திநகர் தொகுதி இம்முறை அமித் ஷா வுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணமாக 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படாது என பாஜக முடிவெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்  பாஜகவின் 35 ஆவது நிறுவன தினத்தை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக எதுவும் எழுதாமல் இருந்த அத்வானி நேற்று முதல்முறையாக தனது இணையதளத்தில் மீண்டும் எழுதியுள்ளார். அதில் ’ அரசியல் ரீதியாக தன்னுடன் ஒத்து போகாமல் முரண்படுபவர்களை பாஜ ஒருபோதும் தனது எதிரிகளாக கருதியது கிடையாது. அவர்களின் எதிர்ப்பாளர்களாக மட்டுமே கருதியது. அவர்களை தேச விரோதிகளாக கருதியதும் கிடையாது. தனிமனித சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பதை பாஜக என்றும் உறுதி செய்துள்ளது. கடந்த காலத்தை மறுந்து விடக்கூடாது. எதிர்காலத்தையும் கட்சி கூர்ந்து பார்க்க வேண்டும். ஜனநாயகத்தை சீர்குலைத்து விடக் கூடாது.’ எனக் கூறியுள்ளார்.

அத்வானி குறிப்பிட்டு யார் பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும் மோடி மற்றும் அமித்ஷாவின் அரசியல் நிலைப்பாட்டையே மோடி கோடிட்டுக் காட்டியுள்ளார் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அத்வானியின் இந்தக் கருத்துக்கு உடன்படுவதாக மோடி டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

TET தேர்விற்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு!!!