Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் தொகை வசூலிக்கப்படும்: அரசியல் கட்சிகளுக்கு போலீஸ் நோட்டீஸ்..

Siva
செவ்வாய், 12 மார்ச் 2024 (07:11 IST)
பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் சேதமான தொகை முழுவதும் அரசியல் கட்சிகள் இடம் இருந்து வசூலிக்கப்படும் என அசாம் மாநில போலீஸ் அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மத்திய அரசு நேற்று சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் சில எதிர்க்கட்சிகள் சிஏஏ சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது 
 
இந்த நிலையில் போராட்டத்தின் போது பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் அதற்கான தொகை சம்பந்தப்பட்ட கட்சிகளிலிருந்து முழுவதுமாக வசூலிக்கப்படும் என்று அசாம் மாநில காவல்துறை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது 
அசாம் மாநிலத்தில் 16 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சிஏஏ சட்டத்திற்கு எதிராக முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில் போலீசாரின் இந்த நோட்டீஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஆண்டில் 1.36 கோடி மரங்கள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை!

நிலவில் விண்கலத்தை நிறுத்தும் முயற்சி தோல்வி.. திடீரென நேரலையை நிறுத்திய ஜப்பான்..!

180 மீட்டர் செல்வதற்கு ஓலா புக் செய்த இளம்பெண்.. காரணத்தை கேட்டு ஆச்சரியம் அடைந்த டிரைவர்..!

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments