Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசாமில் போராட்டம் உச்சக்கட்டம்! – இராணுவம் குவிப்பு: இணைய சேவை முடக்கம்!

Webdunia
புதன், 11 டிசம்பர் 2019 (17:54 IST)
இந்திய குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிராக அசாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியாவில் தங்கியிருப்போருக்கான குடியுரிமை வழங்குவது உள்ளிட்டவற்றை உறுதி செய்யும் குடியுரிமை மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவில் இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்த எந்த அறிவிப்பும் இல்லாததால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன்.

இருப்பினும் மக்களவையில் பெரும்பான்மை கொண்ட பாஜக அரசு இந்த மசோதாவை நிறைவேற்றி, இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்தது. இந்நிலையில் குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மாநில மக்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட தொடங்கி இருப்பதால் அசாமில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

மேலும் போராட்டம் பெருமளவில் பரவாமல் இருக்க இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அமைதியாக இருந்த அசாமை பாஜக அரசு பெரும் இக்கட்டான நிலைக்கு உள்ளாக்கி விட்டதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெள்ளத்தில் இருந்து தப்பிக்கிறது மதுரை.. ரூ.15 கோடி செலவில் கான்கீரிட் கால்வாய்..!

ராஜ்யசபா தொகுதி இல்லை என கைவிரித்த ஈபிஎஸ்.. சத்தியம் வெல்லும் என பிரேமலதா பதிவு..!

மந்திரவாதி சொன்ன மூடநம்பிக்கை.. பச்சிளங்குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த பெற்றோர்..!

தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறை.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி..!

தந்தையை கோடாரியால் வெட்டிய மகன்.. தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments