Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசாமில் போராட்டம் உச்சக்கட்டம்! – இராணுவம் குவிப்பு: இணைய சேவை முடக்கம்!

Webdunia
புதன், 11 டிசம்பர் 2019 (17:54 IST)
இந்திய குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிராக அசாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியாவில் தங்கியிருப்போருக்கான குடியுரிமை வழங்குவது உள்ளிட்டவற்றை உறுதி செய்யும் குடியுரிமை மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவில் இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்த எந்த அறிவிப்பும் இல்லாததால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன்.

இருப்பினும் மக்களவையில் பெரும்பான்மை கொண்ட பாஜக அரசு இந்த மசோதாவை நிறைவேற்றி, இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்தது. இந்நிலையில் குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மாநில மக்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட தொடங்கி இருப்பதால் அசாமில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

மேலும் போராட்டம் பெருமளவில் பரவாமல் இருக்க இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அமைதியாக இருந்த அசாமை பாஜக அரசு பெரும் இக்கட்டான நிலைக்கு உள்ளாக்கி விட்டதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments