Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிற்கு 1.5 பில்லியன் டாலர்கள்! – ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்!

Webdunia
செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (15:56 IST)
கொரோனாவால் இந்தியா பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் ஆசிய வளர்ச்சி வங்கி இந்தியாவிற்கு கடனளிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை பலி கொண்ட கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது தீவிரத்தை காட்டி வருகிறது. எனினும் ஊரடங்காலும், முன்கூட்டிய மருத்துவ பாதுகாப்பு நடவடிக்கைகளாலும் இந்தியா கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. எனினும் நாடு முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வெகுவாக பாதித்துள்ளனர். அன்றாட வேலைக்கு செல்பவர்களின் பாதிப்பை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் ஏழை மக்களுக்கு நிதியுதவியும் வழங்கி வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் இந்தியாவின் தொழில்வளர்ச்சி விகிதம் மற்றும் உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது. இதனால் இந்தியாவிற்கு உதவும் வகையில் 1.5 பில்லியன் டாலர்கள் (ரூபாய் மதிப்பில் 11,300 கோடி) வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் இந்தியாவின் பொருளாதார சுமைகளை முழுவதுமாக சரிசெய்ய முடியாது என்றாலும் ஓரளவு பாதிப்பிலிருந்து விடுபட்டு கொள்ள இந்த கடன் பெரும் உதவியாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெரும் சேதம்: ஆற்றில் உள்ள சிவன் சிலை மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு..!

மழையில் நனைந்து கொண்டு செல்போன் பேசலாமா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சீதை பிறந்த நகரின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.887 கோடி. முதல்வர் நிதிஷ்குமார் ஒப்புதல்..!

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments