Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் 2-3 நாட்களில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார்.. டெல்லி அமைச்சர் பேட்டி

Mahendran
வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (13:09 IST)
இன்னும் 2-3 நாட்களில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவார் என டெல்லி அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமலாக்கத்துறை மட்டுமின்றி சிபிஐ-யும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக ஆதாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. பாஜகவின் பதற்றம் அதிகரித்து வருவது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது என டெல்லி அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் பேட்டியளித்துள்ளார்,.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் விசாரணை செய்ய வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு ஆறு முறை சம்மன் அனுப்பப்பட்ட போதிலும் அவர் ஆஜராகவில்லை. இதனை அடுத்து ஏழாவது முறையாக அவர் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இந்த முறையும் அவள் ஆஜராக மாட்டார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் டெல்லி அமைச்சர் பரத்வாஜ் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அரவிந்த் கெஜ்ரிவால்  கைது செய்யப்படுவார் என்று தனக்கு தகவல் வந்துள்ளதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்து டிக்கெட் Payement Fail ஆனால் அரை மணி நேரத்தில் பணம் ரிட்டர்ன்! - போக்குவரத்துக்கழகம் ஏற்பாடு!

நான் மோசடி செய்துட்டு ஓடினேனா? என்ன நடந்தது தெரியுமா? - முதல்முறையாக மனம் திறந்த மல்லைய்யா!

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments