மாநிலங்களவை எம்பி ஆகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.. ஆம் ஆத்மி அதிரடி முடிவு..!

Mahendran
புதன், 26 பிப்ரவரி 2025 (17:56 IST)
சமீபத்தில் நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநில முதல்வர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், லூதியானா மேற்கு தொகுதி வேட்பாளராக வேறொருவர் நிறுத்தப்பட்டதை அடுத்து, அவர் பஞ்சாப் முதல்வராகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், தற்போது  அரவிந்த் கெஜ்ரிவாலை மாநிலங்களவை எம்பியாக மாற்றி, நாடாளுமன்றத்திற்கு அனுப்ப ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
 
தற்போது, லூதியானா மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சஞ்சீவ் அரோரா மாநிலங்களவை எம்பி ஆக இருப்பதால், அவர் வெற்றி பெற்றால் தனது பதவியை ராஜினாமா செய்வார். அந்த பதவி தான் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
 
இதுவரை டெல்லி சட்டமன்றத்தில் கலக்கிய அரவிந்த் கெஜ்ரிவால், இனி அடுத்து நாடாளுமன்றத்திலும் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

2027-ல் ககன்யான் திட்டம்.. அடுத்து இந்தியாவின் விண்வெளி மையம்! - இஸ்ரோ தலைவர் கொடுத்த தகவல்!

தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்க முடியாதா? 23 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.. புயலாக மாறுமா?

ரூ.1812க்கு ஒரு வருட வேலிடிட்டி.. தினம் 2 ஜிபி டேட்டா.. பி.எஸ்.என்.எல். அசத்தல் திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments