Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஞ்சிய ஆக்ஸிஜனை எங்களுக்கு கொடுத்து உதவுங்கள்! – மாநில அரசுகளுக்கு கெஜ்ரிவால் கடிதம்!

Webdunia
ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (10:49 IST)
டெல்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை அதிகமாக உள்ள நிலையில் மாநில அரசுகளிடம் உதவி கேட்டு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடியுடனான காணொலி சந்திப்பின்போது டெல்லிக்கு ஆக்ஸிஜன் வேண்டு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் “அனைத்து மாநில முதவல்வர்களையும் கேட்டுக்கொள்கிறேன். மாநிலங்களில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜனில், உள்ளூர் தேவை போக எஞ்சியவற்றை டெல்லிக்கு கொடுத்து உதவிடுங்கள். மத்திய அரசு எங்களுக்கு உதவியபோதும், அந்த ஆக்ஸிஜன் எங்களுக்கு போதுமானதாக இல்லை.” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments