Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் மோடியைப் பிரதமர் ஆக்கும் வேலையை ராகுல் செய்கிறார் – அரவிந்த் கெஜ்ரிவால் !

மீண்டும் மோடியைப் பிரதமர் ஆக்கும் வேலையை ராகுல் செய்கிறார் – அரவிந்த் கெஜ்ரிவால் !
, வெள்ளி, 10 மே 2019 (15:30 IST)
காங்கிரஸ் ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக எதிர்ப்பு வாக்குகளை சிதைக்கிறது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்னும் சில தினங்களில் வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. அதற்காக டெல்லியில் காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் பிரச்சாரத்தில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மிக்கு இடையில் மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ‘ ராகுல் காந்தி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சிதைக்கிறது. பாஜக எதிர்ப்பு வாக்குகளை சிதைக்கிறது. உ.பி., மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் கேரளாவில் பாஜகவுக்கு எதிராக செயல்பட்டு வரும் கட்சிகளுக்கு எதிராக தங்கள் வேட்பாளர்களை நிறுத்துகிறது. இதனால் மீண்டும் மோடி பிரதமரானால் அதற்கு காங்கிரஸும் ராகுல் காந்தியும்தான் காரணம். மன்மோகன் சிங் ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப நாங்கள் போராடினோம். ஆனால் அவர் மோடியை விட மேலானவர்’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த கட்சியில் எவன் இருப்பான்..? திமுக தொண்டர்களை படு கேவலமாக பேசிய சீமான்